ரிலீஸுக்கு முன்பே ‘ட்ரெய்ன்’ படத்தின் கதையை சொன்ன மிஷ்கின்..!!!




பிசாசு 2 படத்தில் இணைந்து பணியாற்றிய மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இப்போது ஒரு முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்துக்கு இயக்குனர் மிஷ்கினே இசையமைக்கிறார். பௌசியா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். படத்தில் நாசர் வில்லனாக நடிக்கிறார்.

மேட்டுப் பாளையத்தில் இருந்து சென்னை வரும் டிரெயினில் நடக்கும் சம்பவங்களே திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு டிடெக்டிவ்வாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்தும் இன்னும் ஓடிடி மற்றும் டிஜிட்டல் வியாபாரம் நடக்காததால் படத்தின் ரிலீஸ் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மிஷ்கின் ‘டிரெய்ன்’ படத்தின் கதை என்ன என்பது குறித்துப் பேசியுள்ளார். அதில் “ஒரு புழு எப்படி தன்னுடைய குழந்தைகளை சுமந்துகொண்டு ஊர்ந்து செல்கிறதோ, அப்படி ஒரு ரயில் மனிதர்களை சுமந்துகொண்டு செல்கிறது. வாழவே விருப்பம் இல்லாமல் முடிவைத் தேடி செல்லும் கதாநாயகனின் வாழ்க்கையை எப்படி அந்த பயணம் மாற்றுகிறது என்பதுதான் ஒரு வரிக்கதை” எனக் கூறியுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here