யாழில். இரண்டு மாத குழந்தை உயிரிழப்பு..!!!


யாழ்ப்பாணம் - கரவெட்டியில் சளி, இருமல் காரணமாக இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று நேற்றுமுன்தினம் மரணமடைந்துள்ளது.

இதில் கரவெட்டி துன்னாலை மேற்கைச் சேர்ந்த எட்வேட் தனுசன் செரின் என்ற இரண்டு மாத ஆண் குழந்தையே மரணமடைந்துள்ளது.

குறித்த குழந்தை கடந்த வியாழக்கிழமை (22) சளி மற்றும் இருமல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் நேற்று முன்தினம் சனிக்கிழமை (24) யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருந்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு அறிவுறுத்தினார்.
Previous Post Next Post


Put your ad code here