இலங்கைக்கும் பாகிஸ்தானின் லாகூருக்கும் இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தம்..!!!



இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூர் நகருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போர் நிலைமை தீவிரமடைந்திருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கைக்கும் பாகிஸ்தானின் லாகூருக்கும் இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இன்று (8) காலை பாகிஸ்தானின் லாகூர் நகரில் தொடர்ச்சியாக மூன்று குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றதையடுத்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here