கார் விபத்தில் 15 வயது சிறுமி உட்பட இருவர் பலி ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த காரொன்று, இன்று (23) அதிகாலை இரண்டாவது மைல் கல் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பனை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் காரின் சாரதி மற்றும் அதில் பயணித்த 15 வயது சிறுமி, சாரதி உயிரிழந்ததுடன் சிறுமியின் தாயார் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்துவரும் நிலையில், உயிரிழந்த சிறுமியான மகளுடன் கருவப்பங்கேணியில் உள்ள அவர்களது பன்றிவளர்க்கும் பண்ணையை பார்ப்பதற்காக சம்பவ தினமான இன்று அதிகாலை கார் சாரதியுடன் பயணித்தபோது கார் வேககட்டுப்பாட்டை மீறி பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரியவருகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவர்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news