புத்தளம் மதுரங்குளி பொலிஸ் பிரிவின் சீமரகம பகுதியில் சிறுவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் சீமரகம - கோட்டன்தீவு பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் எனவும்
வீட்டில் உள்ள மின் ஆழியில் மின் சாதனத்தை பொருத்த முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும்
குறித்த சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news