மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு..!!!



புத்தளம் மதுரங்குளி பொலிஸ் பிரிவின் சீமரகம பகுதியில் சிறுவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் சீமரகம - கோட்டன்தீவு பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் எனவும்

வீட்டில் உள்ள மின் ஆழியில் மின் சாதனத்தை பொருத்த முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும்

குறித்த சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here