குளத்தில் தாமரைப் பூ பறிக்கச் சென்று நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்த துயரச் சம்பவம் நேற்று முல்லைத்தீவு அளம்பில் உடுப்புக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,|
உடுப்புக்குளம் பகுதியிலுள்ள தாமரைக்குளமொன்றில் ஆலயத்துக்குத் தாமரைப் பூ பறிப்பதற்காக அளம்பிலைச் சேர்ந்த இருவர் தோணியொன்றில் சென்றிருந்தவேளை தோணி கவிழ்ந்தமையால் இவ் அசம்பாவிதம் சம்பவித்துள்ளது. கிராம மக்களால் இருவரும் குளத்திலிருந்து மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டபோதும் அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதில் அளம்பிலைச் சேர்ந்த இராஜசேகர் நிசாந்தன் (வயது-25), சிவனேசன் பிரணவன் (வயது-10) ஆகிய இருவருமே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Tags:
sri lanka news