இஸ்ரேல் - இரான் இடையிலான போர் நான்காவது நாளாகவும் தொடரும் நிலையில் ஈரானுக்காக இஸ்ரேல் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் சொல்லியிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டுவதாகக் கூறி, அந்நாட்டின் அணு உலைகள் மீது இஸ்ரேல் வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது.
அதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் நகரங்களைக் குறிவைத்து ஈரான் இராணுவம் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தீவிரத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில், பெரும்பாலான ஏவுகணைகள் நடுவானில் வழிமறித்து அழிக்கப்பட்டன.
எனினும், ஒரு சில ஏவுகணைகள் இஸ்ரேல் மீது விழுந்து வெடித்துச் சிதறின. இதனால், இஸ்ரேலின் டெல் அவிவ், ஜெருசலம், பாட் யாம் உள்ளிட்ட நகரங்களில் ஏராளமான கட்டடங்கள் உருக்குலைந்தன.
இரு நாடுகளிடையே தொடர்ந்து மோதல் நீடித்து வரும் நிலையில், நேற்றிரவு ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்ததுடன் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், ஈரானிற்காக, இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் என ஈரான் ஜெனரல் மொஹ்சென் ரெசா அளித்திருக்கும் பேட்டி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் , பாகிஸ்தான் இதனை உடனடியாக மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.