யாழ். மாநகர சபைக்காக முதல்வர் பிரதி முதல்வர் தெரிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை..!!!



வடக்கு மாகாணம் உள்ளூராட்சி திணைக்களத்தின் கீழ் உள்ள யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு வெள்ளிக்கிழமை (13) காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது என வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராகிய தேவந்தினி பாபு 2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் 66 (இ) பிரிவின் கீழ் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் வடக்கு மாகாணத்திற்குள் அமைந்துள்ள உள்ளூராட்சி அதிகார சபைகளிற்கான முதல்வர்/தவிசாளர், பிரதி முதல்வர்/உப தவிசாளர் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதற்கான முதலாவது கூட்டம் நேர அட்டவணையின் பிரகாரம் குறிக்கப்பட்ட இடங்களில் கூட்டப்படுகின்றது என்பதனை வடக்கு மாகாணத்தின் கிழ் உள்ள உள்ளாராட்சி சபைகளுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Previous Post Next Post


Put your ad code here