சிம்பு & வெற்றிமாறன் இணையும் படம் ‘வடசென்னை இரண்டாம் பாகமா’?




சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணையவுள்ள ‘வாடிவாசல்’ திரைப்படம் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறனின் நீண்டகால படமாக்கல் பாணியால் சூர்யா ‘வாடிவாசல்’ படத்தைத் தற்காலிகமாக கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஒரு படம் உடனடியாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஜூலை மாதமே தொடங்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் ஒரு கேங்ஸ்டர் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் இந்த படம் வெற்றிமாறன் ஏற்கனவே இயக்கிய ‘வடசென்னை’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே வடசென்னை முதல் பாகத்திலெயே சிம்புவை நடிக்கவைக்க வெற்றிமாறன் முயற்சி செய்து அது நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
Previous Post Next Post


Put your ad code here