
தமிழ் மொழியில் தனது நடிப்பு திறமையால் இரண்டு தேசிய விருதுகளை வென்ற தனுஷ் பாலிவுட்டிலும் கால்பதித்தார். 2013 ஆம் ஆண்டு ராஞ்சனா படத்தின் மூலம் இந்தியில் அறிமுகம் ஆனார். இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கி இருந்தார். அதன் பின்னர் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த கூட்டணி அத்ராங்கி ரே படத்தில் இணைந்தது.
இந்நிலையில் மூன்றாவது முறையாக தனுஷ்- ஆனந்த் எல் ராய்- ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி இணைந்துள்ளது. ராஞ்சனா வெளியாகி 10 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் “தேரே இஷ்க் மேய்ன்” என்ற படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இந்த படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியிடப்பட்டாலும் தற்போதுதான் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் தனுஷ் விமானப் படை அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியானது. அதை உறுதிப்படுத்துவது போல தற்போது தனுஷ் விமான அதிகாரியின் சீருடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது
Tags:
cinema news