யாழ்ப்பாணம் நல்லிணக்கபுரத்தில் தீக்காயங்களுக்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
இதில் நல்லிணக்கபுரம் கீரிமலை வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த அவர் மனைவியின் தந்தை வீட்டிற்கு கடந்த 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்று தனக்குத்தானே தீ மூட்டியுள்ளார்.
உடனடியாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை(24) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டார்.
இது தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.