
ஒவ்வொரு மூலிகைகளும் தனிப்பட்ட குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளன. அந்த வகையில் துளசியும் பல அரிய பயன்களை நமக்குத் தருகிறது. துளசி கற்பூரமணம் கொண்ட இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறு செடியாகும். புனித துளசி என்றும் அழைக்கப்படும் துளசி, தமிழ் கலாச்சாரத்தில் புனிதமாக மதிக்கப்படும் மூலிகையாகும்.
துளசி அதன் மருத்துவப் பயன் மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்திற்கு பெயர் பெற்றது. கோவில்களில் துளசி மாலையாகவும், பெருமாள் கோவில்களில் துளசி நிவேதனம் செய்யவும், தீர்த்தமாகவும் பயன்படுகிறது. தமிழ்நாட்டில் பலர் வீடுகளில் துளசிச் செடியின் புனிதத்தன்மை மற்றும் மருத்துவப்பயன் அறிந்து அதனை வளர்க்கிறார்கள்.
01.துளசியின் மணம் சிலவகை நோய்க்கிருமிகளையும் மற்றும் சிலவகை தொற்று நோய்களைத் தடுக்கவும், இதன் நெடி கொசுக்களையும், விஷப்பூச்சிகளை விரட்டவும் பயன்படுகிறது.
02.தினமும் காலையில் சிறிதளவு துளசியை மென்று சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி அதிகரிக்கும்.
03.துளசியின் அடாப்டோஜென் பண்புகள் மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கும் மனநலத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
04.கண் கட்டிக்கு துளசியின் இலையை கசக்கி அதன் சாற்றை கண் கட்டியின் மேல் பூசிவரக் கட்டி உடைந்து புண் ஆறும்.
05.துளசிச்சாறுடன், கரிசாலைச்சாற்றைக் கலந்து காதில் விட்டு வரக் காதுவலி, இரத்தம், சீழ்வடிதல் ஆகியவை குணமாகும்.
06.குழந்தைகள் பால் குடிக்காமல் வாந்தி எடுத்தால் 5 துளி துளசி இலை சாற்றோடு தேன் கலந்து கொடுத்தால் வாந்தி நிற்கும்.
07.இரவில் ஒரு கப் நீரில் துளசி விதைகளைப் போட்டு காலையில் குடித்து வந்தால் சிறுநீரக சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.
08.தினமும் மூன்று துளசி இலைகளோடு, மூன்று மிளகு சேர்த்து விழுங்கி வெந்நீர் குடித்துவந்தால் இரத்தம் சுத்தமாகும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
09.துளசி இலையுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து நன்றாகக் கசக்கி பல் வலியுள்ள இடத்தில் வைத்தால் பல்வலி குணமாகும்.
Tags:
Medical