யாழ்.மாவட்ட செயலர் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்..!!!


யாழ்ப்பாண மாவட்ட செயலராக நியமனம் பெற்றுள்ள மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

அதன் போது, மத குருமார்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் செயலராக மருதலிங்கம் பிரதீபனுக்கு கடந்த 20 ஆம் திகதி நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

மருதலிங்கம் பிரதீபன் கடந்த 2024 மார்ச் 09 ம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் மாவட்ட செயலராக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது
Previous Post Next Post


Put your ad code here