
சும்மா, ஆ காட்டுறது பே காட்டுறதை யாழ்ப்பாணத்தில் காட்டக் கூடாது. யாழ்ப்பாணம் அவரவ வெற்றிலை பெட்டி அல்ல, என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்றைய அமர்வின் போது தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இந்த அரசாங்கத்தால் யாழ்ப்பாணத்தில் செய்த ஒரு அபிவிருத்தி திட்டத்தை கூறுமாறு கேட்ட அவர் யாழ்ப்பாணம் வெற்றிலை பெட்டி அல்ல என்றார்.
தொடர்ந்து சும்மா, ஆ காட்டுறது பே காட்டுறதை யாழ்ப்பாணத்தில் காட்டக் கூடாது. யாழ்ப்பாணம் அவரவ வெற்றிலை பெட்டி அல்ல, வரநேரமும் போரநேரமும் சாப்பிடுறதுக்கு அபிவிருத்தி செய்யப்பட்ட ஒரு வேலையை சொல்லுங்கள், மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நடைபெற்றது என்று ஒரு வேலையை கூறுங்கள் என்றார்.
இதனிடையே அமைச்சின் அறிக்கையை வாசிப்பதற்காக, அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பெயரை, சபாநாயகர் அழைத்தார்.
அப்போது எதிரணியில் இருந்த சுஜீவ, கேள்விக்கு பதில் இல்லையா? எனக் கேட்டார்.
எனினும், சுஜீவ உங்களையும் அந்த வாட்டுக்குத்தான் அனுப்ப வேண்டும் என அமைச்சர் பிமல் கூறினார்.
மறுபுறத்தில் இருந்த சுஜீவ, எந்த வாட்டுக்கு என்று கேட்க, பின்னர் கூறுகிறேன் என்றார் பிமல்,
இதனிடையே எழுந்த அர்ச்சுனா, கேள்விக்கு பதில் இல்லையா? எனக்கேட்டார்.
எனினும், பைத்தியங்களின் கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியாது என்றும், சபையில் குழப்பங்களை ஏற்படுத்தும் நபர்களை உடனடியாக வெளியேற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.
NEWS - Thamilan