யாழில். சைக்கிளில் சென்ற பெண்ணின் சங்கிலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்கள்..!!!



யாழ்ப்பாணத்தில் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணொருவரின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் அறுத்து சென்றுள்ளனர்.

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை பெண்ணொருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இரு வழிப்பறி கொள்ளையர்கள் , பெண்ணின் சங்கிலியை அறுத்துக்கொண்டு , மோட்டார் சைக்கிளில் தப்பியோடியுள்ளனர்.

குறித்த சம்பவம் அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் , கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ள காணொளிகள் அடிப்படையில் , பொலிஸார் வழிப்பறி கொள்ளையர்களை அடையாளம் கண்டுள்ளதுடன் , கொள்ளையர்கள் , கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் அடையாளம் கண்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் இருவரையும் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here