100 ஆண்டுகளுக்கு பின் ஒரே வேளையில் உருவாகியுள்ள 3 ராஜயோகங்கள்: இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்..!!!


ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியையும், நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்களும் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கமும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் மகர ராசியில் 3 ராஜயோகங்கள் ஒரே வேளையில் உருவாகியுள்ளன. அதில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகமும், புதன் மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகமும், செவ்வாய் உச்ச ராசியில் இருப்பதால் ருச்சக ராஜயோகமும் உருவாகியுள்ளன.

முக்கியமாக இந்த 3 ராஜயோகங்களும் சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளன. இந்த ராஜயோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் சூரியனை போல் பிரகாசித்து, வாழ்வில் பல நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளன. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மகரம்

மகர ராசியின் முதல் வீட்டில் உருவாகியுள்ள மூன்று ராஜயோகங்களால் இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த சில நாட்கள் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். எடுத்த ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மற்றும் பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். முன்றேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் அதிர்ஷ்ட வீடான 9 ஆவது வீட்டில் 3 ராஜயோகங்கள் உருவாகியுள்ளதால், இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களும், லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.


மீனம்

மீன ராசியின் 11 ஆவது வீட்டில் 3 ராஜயோகங்கள் உருவாகியிருப்பதால், இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பல புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் உடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளை செய்தால், எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெறலாம். உறவுகளைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
Previous Post Next Post


Put your ad code here