ஜோதிடத்தின் படி, கிரகங்கள் தனது நிலை மாற்றங்களினால் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியும் கூட.
இப்படிப்பட்ட சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்கள். இந்நிலையில் சுக்கிரன் ஜூன் 08 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கடக ராசியில் ஏற்கனவே தேவர்களின் குருவான குரு பகவான் பயணித்து வருகிறார். இதனால் இந்த சுக்கிர பெயர்ச்சியால் கடக ராசியில் குரு-சுக்கிர சேர்க்கையால் மிகவும் மங்களகரமான கஜலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த ராஜயோகமானது ஜூலை 04 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். இந்த ராஜயோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 5 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தை பெறவுள்ளனர். இப்போது சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதோடு, இந்த வீட்டில் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதன் விளைவாக இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் வசதிகள் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நதி நிலைமை மேம்படும். தாயாரின் முழு ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதோடு, இந்த வீட்டில் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதன் விளைவாக இந்த ராசிக்காரர்கள் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய தொழில் வாய்ப்புக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்வதோடு, இந்த வீட்டில் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். ஆரோக்கியம் மேம்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலைமை வலுவடையும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். மொத்தத்தில் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நேர்மறையான மாற்றங்களைக் காணக்கூடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதோடு, இந்த வீட்டில் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசித்து, ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். செல்வம் பெருகும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை தொடர்பாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இதன் மூலம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதோடு, இந்த வீட்டில் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.
Tags:
Rasi Palan
