பொதுத் தேர்தல் திகதி தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூன் 8) தேர்தல்கள் ஆணைக்குழு கூடி தீர்மானிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இன்று மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
அத்தோடு பொதுத் தேர்தல் வாக்களிப்பை நடத்துவதற்கான சுகாதார வழிகாட்டல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க அனுப்பிவைத்துள்ளார் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.
Tags:
sri lanka news