யாழ்ப்பாணம்- நீர்வேலி பகுதியில் நடந்த மோதல் சம்பவத்தில், படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த செல்வநாயகம் ஜெயசிறி என்பவரே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உயிரிழந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருநபர்களுக்கு இடையில் எற்பட்ட முரண்பாடு, கைகலப்பாக மாறியதில், ஒருவரை ஏனையோர் கடுமையாக தாக்கினர்.
இதில் படுகாயமடைந்தவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அருகில் இருந்த ஏனையவர்கள் அனுமதித்துள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், உயிரிழந்த நபரை தாக்கியவரை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.