15 பவுண் தங்க நகை கைதடியில் திருட்டு..!!!


சாவகச்சேரி கைதடிப் பகுதியில் 15 பவுண் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்றுச் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வீட்டிலிருந்த வர்கள் உறக்கத்திலிருந்தபோது ஓடு பிரித்து உள்நுழைந்த திருடர்கள் மேற் படி திருட்டை நிகழ்த்தியுள்ளனர்.

இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here