யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று பவுணுக்கு ஆயிரம் ரூபாயால் உயர்வடைந்துள்ளது.
கடந்த வாரம் சரிவைக் கண்ட தங்கத்தின் விலை இந்த வாரம் ஏற்றத்தைக் கண்டுள்ளது. கடந்த மூன்று நாள்களின் தங்கத்தின் விலை ஆயிரத்து 500 ரூபாயால் அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் சர்வதேச பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. அத்தோடு உலகப் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.
இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் உலக சந்தையில் தங்கத்தின் விலையில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை
யாழ்ப்பாணத்தில் இன்று (செப். 30) ஒரு பவுண் (22 கரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 93 ஆயிரத்து 50 ரூபாயாக அதிகரித்துள்ளது.
தூய தங்கத்தின் விலை
ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. 24 கரட் தூய தங்கத்தின் விலை பவுணுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது.
8 கிராம் தூய தங்கத்தின் விலை ஒரு லட்சத்து ஆயிரத்து 500 ரூபாயாக உயர்ந்துள்ளது.