இலங்கையில் மேலும் 103 பேருக்கு கொரோனா..!!!


மினுவாங்கொட கொரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் 103 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுக்கு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றில் அவர்களுடன் தொடர்புடையோர் உள்ளிட்ட ஆயிரத்து 186 பேர் இன்றுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் இருவர் மற்றும் 101 பேர் அவர்களுடன் தொடர்புடையோர் என்று அரச தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இவர்களில் 5 பேர் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த 5 பேரும் புத்தளம் வெண்ணப்புவயைச் சேர்ந்தவர்கள்.

Previous Post Next Post


Put your ad code here