வடக்கில் 488 மாணவர்கள் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவில்லை..!!!


தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு வடக்கு மாகாணத்தில் இருந்து 18 ஆயிரத்து 387 மாணவர்கள் விண்ணப்பித்த போதும் 488 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 897 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 4 ஆயிரத்து 818 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 3 ஆயிரத்து 46 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 3 ஆயிரத்து 14 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 570 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 2 ஆயிரத்து 531 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 439 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 2 ஆயிரத்து 325 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளதோடு மன்னார் மாவட்டத்திலே 2 ஆயிரத்து 107 மாணவர்கள் விண்ணப்பித்தபோதும் ஆயிரத்து 961 மாணவர்கள் மட்டுமே பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.


Previous Post Next Post


Put your ad code here