கினிகத்தேன பாடசாலையொன்றின் அதிபர் ஆசிரியர்கள் உட்பட 100 பேரை சுய தனிமைப்படுத்தலிற்கு உட்படுமாறு சுகாதார அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கினிகத்தேனயில் உள்ள சுற்றுலா பங்களாவில் கலந்துகொண்ட மாணவர்கள் பழைய மாணவர்கள் உட்பட பலரை சுயதனிமைப்படுத்தலிற்கு உட்படுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
செப்டம்பர் 26 ம் திகதி பழைய மாணவர்கள் ஆசிரியர்களுக்கா நிகழ்வொன்றை ஏற்பாடுசெய்திருந்தனர் இதன் போது இசை நிகழ்வொன்று இடம்பெற்றது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த இசைநிகழ்வில் கலந்துகொண்ட இசைக்குழுவினர் முதல்நாள் மினுவாங்கொட தொழிற்சாலையில்இடம்பெற்ற இசைநிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த குறிப்பிட்ட இசைகுழுவின் கலைஞர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் நாட்டின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.