ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய வர்த்தக நிலையங்களை நாளை முதல் மூடுமாறு அறிவிப்பு..!!!


கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களுக்கான வர்த்தக நிலையங்கள் திறப்பதற்கு கடந்த சில நாள்கள் அனுமதிக்கப்பட்டது.

எனினும் நாளை செவ்வாய்க்கிழமை தொடக்கம் வரும் 15ஆம் திகதி வியாழக்கிழமை வரை அவற்றை மூடுமாறு கம்பஹா மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மேலும் சில நாள்களுக்கு நீடிக்கும் என்று இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

Previous Post Next Post


Put your ad code here