தேர்த் திருவிழாவில் நகை கொள்ளை..!!!
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் உற்சவத்தில் கலந்துகொண்ட பக்தர்களின் பத்தரை பவுண் தங்க நகை காணாமல் போயுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை வல்லிபுர ஆழ்வார் ஆலயம் தேர் உற்சவம் நடைபெற்றது. இதன்போது தேர் உற்சவத்தில் கலந்துகொண்டு இருந்த மூவர் தங்களது தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
இதேவேளை தேர் திருவிழாவில் கலந்துகொண்ட பெண்மணி ஒருவரின் தங்க நகை ஒன்று ஆலய உள்வீதியில் தவறவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.