Thursday 1 October 2020

கெட்ட வார்த்தை பேசிய கிளிகள் வெளியெற்றம்..!!!

SHARE

இங்கிலாந்தின் லின்கன்ஷையர் வனவிலங்குப் பூங்கா, வருகையாளர்களைப் பார்த்து கெட்ட வார்த்தை பேசிய 5 கிளிகள் பொதுமக்கள் பார்வையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

ஆபிரிகன் கிரே வகையைச் சேர்ந்த அந்தக் கிளிகள் ஓகஸ்ட் மாதம் பூங்காவால் தத்தெடுக்கப்பட்டன. பின் அவை ஐந்துமே ஒன்றாகத் தனிமைப்படுத்தப்பட்டன.

ஆனால் வெளியே காட்சிக்கு வைத்த பின்னர் அவை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் கெட்டவார்த்தை பேசுவதாக கூறப்படுகிறது.

சில வருகையாளர்கள் அதைக் கண்டு சிரித்தாலும் வார இறுதியில் குழந்தைகள் வருவதால் கிளிகள் அகற்றப்பட்டன.
SHARE