மன்னாரில் மேலும் மூவருக்கு பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
மன்னார் ஆயர் இல்லத்தில் பணியாற்றிய கட்டடத் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கடந்த வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. அதனையடுத்து அவருடன் பணியாற்றிய ஏனையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட 5 பேருக்கு நேற்று சனிக்கிழமை கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் 243 பேருக்கு இன்று பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் 3 பேருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனைய அனைவருக்கும் தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மன்னார் பட்டித்தோட்டம் மற்றும் பெரிய கடை பகுதிகள் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தனிமைப்படுத்தல் இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மறு அறிவித்தல் வரை இந்த கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன என்று இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
Tags:
sri lanka news