Sunday 1 November 2020

நாட்டில் மேலும் 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!!

SHARE

நாட்டில் மேலும் 193 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட 193 பேரில் 187 பேர் மினுவாங்கொட – பேலியகொட கொரோனா தொற்று கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் 6 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மினுவாங்கொட – பேலியகொட கோரோனா பரவல் கொத்தணியை அடுத்து 7 ஆயிரத்து 378 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 10 ஆயிரத்து 856 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
SHARE