Sunday 8 November 2020

510 கொரோனா நோயாளிகள் இன்று அடையாளம்..!!!

SHARE


நாட்டில் மேலும் 227 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று (8) ஞாயிற்றுக்கிழமை இரவு கண்டறியப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை 510 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மினுவாங்கொட – பேலியகொட கோரோனா வைரஸ் கொத்தணி தோற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட – பேலியகொட கோரோனா பரவல் கொத்தணியை அடுத்து 10 ஆயிரத்து 443 பேர் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 13 ஆயிரத்து 929 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்லழ 8 ஆயிரத்து 285 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வைத்தியசாலைகளில் 5 ஆயிரத்து 383 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

SHARE