ஊஞ்சல் கயிறு சிக்கியதில் 7 வயது சிறுமி உயிரிழப்பு..!!!


ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்குண்டதால் கழுத்து இறுக்கி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி நேற்று உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் - கோயில் வீதியைச் சேர்ந்த உயிந்தன் சாதுரியா (வயது 7) என்ற சென். ஜோன் பொஸ்கோ வித்தியாலத்தில் கல்வி கற்கும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

கடந்த 3ஆம் திகதி இந்தச் சிறுமி ஊஞ்சல் ஆடுவதற்காக மரத்தில் கொழுவி இருந்த ஊஞ்சல் கயிற்றினை கதிரையில் ஏறி எடுக்க முற்பட்டுள்ளார். ஊஞ்சலில் போடப்பட்ட முடிச்சினை அவிழ்க்க முற்பட்டபோது கதிரையிலிருந்து விழுந்தபோது கயிறு கழுத்தில் சிக்குண்டுள்ளது.

வெளியில் வந்த தாயார் மகள் கயிற்றில் தூங்கி கொண்டு இருப்பதனைக் கண்டு அவரை மீட்டு  உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதித்தார். அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி நேற்று உயிரிழந்தார்.

Previous Post Next Post


Put your ad code here