விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டக்குழுமத்தின் 1ம் ஆண்டு நிறைவுனை முன்னிட்டு KM Production நிறுவனத்தினருடன் இணைந்து கொடைஎனும் குருதிக்கொடைக்கான பாடலினை வெளியிட்டு வைத்துளனர்.
இப்பாடல் உலகத்தமிழ் வரலாற்றில் முதலாவது குருதிகொடைக்கான தமிழ் பாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வு நேற்றையதினம் மாலை சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது. இப்பாடலினை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை இரத்தவங்கி அதிகாரி பிரதீபன் அவர்களும் யாழ் போதனா வைத்தியசாலை இரத்தவங்கியினுடைய பொதுச்சுகாதார பரிசோதகர் ரவீனதாஸ் அவர்களும் கலந்து வெளியிட்டு வைத்தனர்.