ரெலோ, புளொட் அமைப்புகளை சாடுகிறார், தமிழரசுக் கட்சி உறுப்பினர் எஸ்.சுகிர்தன்..!!!


ரெலோ, புளோட் கட்சிகள் தமிழரசு கட்சியை போன்று தங்களை இன்னமும் பலப்படுத்தவில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

ரெலோ, புளொட் கட்சிகள் தமிழரசு கட்சியை போன்று தங்களை இன்னமும் பலப்படுத்தவில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

கப்பிட்டல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விடிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே எஸ்.சுகிர்தன் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்…

யாழ் மாவட்டத்தில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ரெலோ கட்சி சார்பில் போட்டியிட்ட பல உறுப்பினர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆயுள் கால உறுப்பினர்களாவர்.

அவர்கள் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேடித்திரிந்த போது பொருத்தமில்லாத வேட்பாளர்களை போட்டியிட வைத்து தோல்வியடைய கூடாது என்பதற்காக தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகள் தமிழரசு கட்சியை போன்று தங்களுடைய கட்சியை சரியான முறையில் பலப்படுத்தவில்லை.

தேர்தல் நோக்கத்திற்காக தேர்கல் காலங்களில் வேட்பாளர்களை கொண்டு வருகின்றார்கள்.

இன்று ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு வட்டாரத்திலும் மூலக் கிளைகளை அமைத்து இலங்கைத் தமிழரசு கட்சி தன்னை பலப்படுத்தியிருக்கின்றது.

ஏனைய பங்காளிக் கட்சிகள் இன்னும் இதனை செய்யவில்லை என தெரிவித்துள்ளார். 

Previous Post Next Post


Put your ad code here