மாவீரர் நாள்: தமிழர் இல்லங்களில் உருக்கமாக நினைவுகூரப்பட்டது..!!!

 

தமிழீழ விடுதலைக்காகப் போராடி உயிர் துறந்த 40 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களை நினைவு கூர்ந்து, உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இன்று சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்.

இன்று மாலை 6.06 மணியளவில், மாவீரர்கள் நினைவாக, ஒரு நிமிடம் மௌன வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, முதல் மாவீரன் லெப்.சங்கர் உயிர் துறந்த, மாலை 6.07 மணியளவில், உலகெங்கும் வாழும் தமிழர்கள், தமது இல்லங்களிலும், பொது இடங்களிலும், சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தமிழர் தாயகத்தில் இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியிலும், வீடுகளில், தமிழ்மக்கள் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்

Previous Post Next Post


Put your ad code here