இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
கொழும்பு 10, மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் அவரது வீட்டிலேயே உயிரிழந்துள்ள நிலையில், பிரேத பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட 19 தொற்று காரணமாக ஏற்பட்ட உயர் இரத்த அழுத்தத்துடன் மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
Tags:
sri lanka news