கிளிநொச்சியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று..!!!


கிளிநொச்சி, கோணாவில்  யூனியன் குளம் முருகன் கோவிலடியில் வசிக்கும் 47 வயதுடைய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று   புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 27ஆம் திகதி கொழும்பிலிருந்து வீடு திரும்பிய அவர், சுகாதாரத் துறையினரால் சுயதனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு கடந்த 9ஆம் திகதி நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் முடிவு காணாது என்று அறிக்கை கிடைத்திருந்தது.

இந்த நிலையில் அவரிடம் நேற்று மீளவும் மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அதன்போது அவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பில் கட்டட நிர்மாணத்துறையில் பணியாற்றும் அவர் கிளிநொச்சியில் தனிமையில் வசித்து வருகின்றார் என்று தெரிவிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னதாக இரண்டு பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் இவர் மூன்றாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post


Put your ad code here