கார்த்திகை மரநடுகை யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்..!!!


கார்த்திகை மரநடுகை வேலைத்திட்டம் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசனால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பார்வதி பரமேஸ்வரர் ஆலயத்தின் முன்பாக புன்னை மரத்தை நாட்டி வைத்து வேலைத்திட்டம் ஆரம்பமானது.

தொடர்ந்து கார்த்திகை மரம் நடுகை மற்றும் தற்போது மரங்களை வளர்ப்பதில் அக்கறை இன்றி செய்யப்படும் சமுதாயமாக மாறி உள்ள நிலையில் அதை பொருளாதார ரீதியாகவும் சமய ரீதியாகவும் மாத்திரமே அதனை பயன்படுத்துகின்றன அனைவரும் பயன்பெற வேண்டும் என்றும் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும் இம்முறை வீடுவீடாகச் சென்று மரங்களை வழங்க உள்ளதாகவும் சரியான முறையில் வளர்த்து விட படுகின்றனவா என்பது தொடர்பிலும் அவ்வாறு சரியான முறையில் பராமரித்து வளர்த்து விடுபவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நடுகை மாதத்தின் இறுதியில் இடம்பெறும் என்றும், இதன் போது தமிழ் தேசிய பசுமை பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் குறிப்பிட்டார்.





 
Previous Post Next Post


Put your ad code here