யாழ்ப்பாணத்தில் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி பொதுச் சந்தையில் இன்று (டிசெ.13) ஞாயிற்றுக்கிழமை 39 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய எழுமாறாக 39 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
மருதனார்மடம் பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கொத்தணி ஏற்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி சந்தையில் உள்ள வியாபாரிகள் உள்ளிட்ட 39 பேரிடம் இன்று மாதிரிகள் பெறப்பட்டுள்ளன
இந்த மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.