நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் அடையாளம் காணப்பட்டதன் பின்னர், அவர்களின் புகைப்படங்களை ஊடகங்களின் ஊடாக பகிரங்கப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர் துஷ்பிரயோகம், மகளிர் துஷ்பிரயோகம், கொள்ளை, தாக்கதல் நடத்துதல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், அடையாளம் காணப்பட்டதன் பின்னர் அவர்களின் புகைப்படங்களை ஊடகங்களின் ஊடாக பொதுமக்களுக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
புகைப்படங்களை காண்பிப்பது மாத்திரமன்றி, குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் தகவல்களையும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது தகவல்களை பொதுமக்கள் அறிந்துக்கொள்வார்கள் என்ற அச்சம் மற்றும் வெட்கத்தினால், குற்றச் செயல்கள் குறையும் என்ற எதிர்பார்ப்புடனேயே இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டிலுள்ள மக்களுக்கு, அச்சம் மற்றும் சந்தேகம் இன்றி வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தும் பொறுப்பே தனக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
அந்த பொறுப்பை தன்னால் நிறைவேற்ற முடியவில்லை என்றால், தான் இந்த பதவியை இராஜினாமா செய்வதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.
Tags:
sri lanka news