நாடு முழுவதும் உப கொரோனா கொத்தணிகள்..!!!


நாட்டின் பல்வேறு பகுதிகளில், உப கொரோனா கொத்தணிகள் உருவாகியுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவிக்கின்றார்.

இதற்கமைய, ஆரம்ப தொற்றாளர்களை கண்டுபிடிக்க முடியாத நிலையில், தற்போது பல்வேறு கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக, அவர் தெரிவிக்கின்றார்.

அத்துடன், கெழும்பு வடக்கு பகுதியில் காணப்பட்ட கொரோனா அச்சுறுத்தல் நிலைமை, தற்போது கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட ஏனைய பகுதிகளிலும் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா தொற்று சமூக மட்டத்தில் பரவவில்லை என தொற்றுநோய் நிபுணர்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் கூறுகின்ற போதிலும், கொரோனா தொற்று தொடர்ந்தும் பரவிவருவதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post Next Post


Put your ad code here