கொவிட்-19 க்கான ஆயுர்வேத மருந்து தொடர்பில் விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை..!!!


கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய மட்டத்தில் இனங்காணப்பட்டுள்ள சிகிச்சை முறைமை , ஆயுர்வேத மருந்து ஆகியவற்றை விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேசிய பரிசோதனை சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பில் மேலும்  குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பு பல்கலைக்கழக ஆயுர்வேத வைத்தியர் பேராசிரியர் ஹர்ஷ சுபசிங்க மற்றும் இந்திக ஜயகொட ஆகியோர்  கண்டுப்பிடித்துள்ள  தேசிய வைத்திய முறைமை மற்றும் கேகாலை ஆயுர்வேத வைத்தியர் தம்மிக பண்டார தயார் செய்துள்ள ஆயுர்வேத மருத்துவ பானம்  ஆகியவற்றை விஞ்ஞான தொழில்நுட்ப பரிசோதனைகளுக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

கேகாலை ஆயுர்வேத வைத்தியர் தம்மிக பண்டார தயாரித்த ஆயுர்வேத மருத்துவ பாணத்தை  ரஜரட பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி பரிசோதனை செய்துள்ளார்.

அனைத்து மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவ பீடங்களிலும்  தற்போது பரிசோதனை ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

5  விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் தேசிய பரிசோதனை சபை தலைவரின் தலைமைத்துவத்திலும் குறித்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

உலகளாவிய மட்டத்தில் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள  கொவிட்-19 தடுப்பூசி குறித்த  பரிசோதனையின் சி.டி.எச் அறிக்கை தேசிய பரிசோதனை சபையால் சுகாதார அமைச்சருக்கு வழங்கப்பட்டது.

Previous Post Next Post


Put your ad code here