நல்லூர் ஐஸ்கிறீம் கடையில் தீ விபத்து..!!!


யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐஸ்கிறீம் கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பருத்தித்துறை வீதியில் அமைதுள்ள குறித்த கடையின் சமையல் அறையில் இருந்த எரிவாயு கசிவு காரணமாகவே  தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தன் காரணமாக உடணடியாக மாநகர தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து தீயணைப்பு பிரிவினரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post


Put your ad code here