ரி.என்.ரி. வெடிபொருளை கிரைண்டரில் அரைத்த போது வெடித்ததில் 8 பேர் படுகாயம் - யாழில் சம்பவம்..!!!


யாழ்ப்பாணம் குருநகரில் ரி.என்.ரி. வெடிபொருளைக்  கிரைண்டரில் போட்டு அரைத்தபோது அது வெடித்தமையினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குருநகர் பகுதியில் நேற்றிரவு டைனமற் தயாரிக்கும் நோக்கில் ரி.என்.ரி. வெடிபொருளைத் தூளாக்க மீனவர் ஒருவர் முயன்றுள்ளார். எனினும் வெடிபொருள் கல்லுத்தன்மையாக காணப்பட்டுள்ளது. இதனால் அந்த வெடிபொருளை வீட்டில் இருந்த கிரைண்டரில் போட்டு குறித்த மீனவர் அரைத்துள்ளார். இதன்போது அது பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது.

இந்த அனர்த்ததில் சிக்கி வீட்டிலிருந்த 8 பேர் படுகாயடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில்  மூவர் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here