க.பொ .த சாதாரண தர பரீட்சை மீண்டும் பிற்போடப்பட்டது..!!!


க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என்று கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.

புதிய திகதி பரீட்சைக்கு 6 வாரங்களுக்கு முன் அறிவிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை 2021 ஜனவரி 18ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதிவரை நடத்தத் திட்டமிடப்படிருந்தது.

எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ் தொற்று பரவல் நிலமையையால் பாடசாலைகள் பல மூடப்பட்டுள்ள நிலையில் பரீட்சையை திட்டமிட்ட நேர அட்டவணையில் நடத்த முடியாது என்று கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்

Previous Post Next Post


Put your ad code here