வடக்கில் 7 பேருக்கு கொரோனா தொற்று ; யாழ்.நகரில் ஒருவர் அடையாளம்..!!!


வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 6 பேர் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 295 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் எவருக்கும் தொற்று இல்லை.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 457 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 7 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் 5ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 65 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவர் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டார். அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மீன்சந்தை தொற்றாளர்களுடன் தொடர்புடையோர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பகுதியினருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் ஐவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here