சர்வதேசத்திடம் நீதிகோரி நல்லூரில் பேரணி..!!!


இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு கோரிய யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பேரணி நல்லை ஆதீனம் முன்பாக நிறைவடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இருந்து பேரணி இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பமாகியிருந்தது.

இதையடுத்து, சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் தற்போது இடம்பெற்றுவரும் நல்லை ஆதீனம் முன்பாக சென்று பேரணி நிறைவடைந்தது.

குறித்த போராட்டத்தில், வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், சிவில் சமூகத்தினர், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.









Previous Post Next Post


Put your ad code here