யாழ் நகரில் கண் வைத்திய நிபுணருக்கு பற்றாக்குறையா?


யாழ் நகரில் கண் வைத்திய நிபுணருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இது குறித்து சமூக வலைத் தளமொன்றில் சமூக செயற்பாட்டாளார் ஒருவர் அனுபவம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் குறிப்பிடுகையில் ;

யாழ் நகரில் உள்ள பிரபல கண் வைத்தியசாலைக்கு குறித்த வைத்திய சாலையின் ஸ்தாபகரிடம் சிகிச்சை பெறும் பொருட்டு முற்பதிவுக்காக செல்லும் போதெல்லாம் ""வைத்தியர் ஒரு மாதம் லீவில் கொழும்பு சென்று விட்டார் . அவரிடம் சிகிச்சை பெறுவதாயின் ஒரு மாதம் பின் வாருங்கள் ""எனக் கூறப்பட்டு வந்தது. அவ்வாறே ஒரு மாதம் கடந்து மீண்டும் சென்றாலும் இதே புராணம் தான்.

இவ்வாறு இருக்கும் போது இந்த இடைவெளியில் வேறு வைத்தியர்களின் பெயர்களை கூறி அவர்கள் சிறந்த வைத்தியர்கள் /அவர்கள் தான் இப்போ சிறந்த சிகிச்சை செய்கின்றனர் அவர்களிடம் நீங்கள் சிகிச்சை பெற முடியும் என வெவ்வேறு வைத்தியர்களை பரிந்துரைப்பும் செய்தனர்.
பரிந்துரைக்கப்பட்டவர்கள் ஆளுமையானவர்களாகவும் இருக்கக் கூடும் . ஆனால் நேர்மையாக பரிந்துரைப்பது நம்பிக்கைக்குரியதல்லவா??
.
இந்த நிலவரத்தை ஒரு வருட காலத்தில் கடந்து

மீண்டும் இம்முறையும் அதே வைத்திய சாலையில் அதே வைத்தியரை தேடி சென்றால்

""அவர் வர. ஒன்று இரண்டு கிழமை செல்லும் பெயரை பதிவு செய்யுங்கள். வந்ததும் போன் எடுத்து கூப்பிடுவோம் ""என்றார்கள்.

இரண்டு கிழமையும் கடந்தது. அழைக்கப்படவில்லை.

இவ்விடயத்தை நண்பர் ஒருவரிடம் பகிர்ந்த போது அவரும் இவ் அனுபவத்தை பெற்றுள்ளதுடன் தமக்கும் மனைவிக்கும் கண் பரிசோதனை செய்யப்படாமலே தாதியர்கள் விலை மதிப்பார்ந்த மூக்குக் கண்ணாடியினை பெற்றுக்கொள்ள பற்றுச்சீட்டு விநியோகித்தனர் என்றும் ; தாம் வைத்திய ஆலோசனை பெறாமல் எப்படி இதனைப் பாவிக்க முடியும் ???? என்ற கேள்விகளுடன் முரண்பட்டு விடைபெற்றதாக தெரிவித்தார்.

இவ்வாறு இருக்கையில் வெளிச் சமூகத்துடன் ஓடித்திருந்து செயற்படுபவர்களின் நிலையே திணறுதலாக இருக்கும் போது அப்பாவி மக்களின் நிலைமையை யார் காப்பாற்ற முடியும்???

"கண் ""அல்லவா??? ....
எந்த வைத்தியர்களாயினும் நோயாளிக்கு நம்பிக்கை வரவேண்டாமா?

கடந்த காலத்திலும் யாழ் நகரில் பிறிதொரு தனியார் வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு சென்ற பத்துப் பேர் கண் பார்வையையும் பறி கொடுத்த நிலையில் இருக்கையில் .........
எந்த வைத்தியரை நம்பி எங்கு யாரிடம் சிகிச்சை பெறலாம்????
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்.தர்மினி
10.03.2021

Previous Post Next Post


Put your ad code here