ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை வரைவை நிராகரித்த நிலையில் வாக்கெடுப்பு நடத்தபட்டது.
அதில் வரைவுக்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இதன்மூலம் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்களுக்கு பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் உள்ள விடயங்களை வலியுறுத்தும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வரைபு மீதான வாக்கெடுப்பு நேற்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், அது இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று (இலங்கை நேரம்) மாலை 4 மணியளவில் பிரிட்டனினால் தீர்மான வரைவு வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்பட்டது.
தீர்மானம் 30/1 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளபடி நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் கூறுகிறது.
இந்த தீர்மானத்தை கனடா, ஜேர்மனி, வடக்கு மாசிடோனியா, மலாவி, மாண்டினீக்ரோ மற்றும் பிரிட்டன் இணைந்து வழங்கியது.
ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதித்துவப்படுத்தும் 193 நாடுகளில் 47 நாடுகள் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் உறுப்பினர்களாக உள்ளன.
பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கனவே இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக கூறியிருந்தன