தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு..!!!


எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் அனைத்து பேக்கரி பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இறக்குமதி கட்டுப்பாடுகள், வரி மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவையை அடிப்படையாக கொண்டே குறித்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன குறிப்பிட்டார்.

எண்ணெய் மற்றும் வெண்ணெய்க்கு அதிக வரி விதிக்கப்படுவதால் பேக்கரி தொழில் கடுமையாக பாதிக்கப்படுவதாக பேக்கரி தொழிலை நடத்துவதில் உரிமையாளர்கள் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.

இதேவேளை மற்றய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன என குறிப்பிட்ட அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன, குறித்து குறித்து தெரிவித்தும் எந்த நடவ்டிக்கையைம் எடுக்கப்படவில்லை எனவும் கூறினார்.

எனவே பண்டிகை காலத்தில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கும் என அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன குறிப்பிட்டார்.
Previous Post Next Post


Put your ad code here