யாழ்ப்பாணத்தை முடக்குவதா? மக்களின் நடத்தைகளிலேயே தங்கியுள்ளது..!!!


ஒரு மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் திடீரென அதிகரித்தால் அந்த மாவட்டத்தை முற்றாக முடக்குவதா? இல்லையா? என்பது மக்களின் நடத்தைகளிலேயே தங்கியுள்ளது என இராணுவத் தளபதியும் கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் .

எனவே, யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் சுகாதார ஒழுங்கு விதிகளை உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார் .

யாழ்ப்பாண மாவட்டத்தின் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் முடக்கப்பட்ட பகுதிகளுக்குள் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதோடு, சுகாதார வழிகாட்டல்களை ஒழுங்கான முறையில் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேநேரம், சுகாதாரப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் படைகளின் சேவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
Previous Post Next Post


Put your ad code here